ஒரு புத்தகத்தின் சுய சரிதை!
ஒரு தாவரம்
வாழ்ந்ததற்கான
மொத்தச் சுவடுகளையும்
அழித்துவிட்டு
அதன் மீது
அடித்து திருத்தி
எழுதப்படுகின்றன
பல பெரிய மனிதர்களின்
சுய சரிதை அபத்தங்கள்!
உண்மையோ! புரட்டோ!
கருத்து சுதந்திரத்தை
பசை தடவி,
நூலால் பிணைத்து
பாதுகாக்க
நாளும் வியர்க்கிறான்
அச்சகத்தொழிலாளி !
நடைபெற இருக்கும்
புத்தக கண்காட்சியை
மனதில் வைத்து
வாடகைக்கு
'அடுத்தமாதம்' சொல்லி
மின்சாரக்கட்டனத்திற்கு
மட்டும்
கடன் வாங்குகிறார்
ஒரு புத்தகக்கடைக்காரர்!
அவசரமாய் மூடி
எழுகையில்
பக்கங்களின் இடையில்
படிமமாகி
சாபமிட்டு சாகின்றன
சித்தெறும்புகள்!
யாருக்கோ சமர்ப்பணம்
செய்து,
யார் யாருக்கோ
நன்றி கூறி,
நிறைவடைகிறது
புத்தகத்தில் எழுதப்படாத
அதன்
சுய சரிதை!
-யோவ்
கன்னம்.கம்
கன்னம்.கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக